Samstag, Mai 19, 2012

ஜெயமோகன்களைவிட்டு இவர்களைக் கவனியுங்கள்!

முள்ளி வாய்கால் போரழிவுகளை மூன்றாவது ஆண்டாக நினைவு கூருகிறோம்.போரினது முகம் மிகக் கொடியதென்பதை நமது மக்கள் நேரிடையாகத் தரிசித்த"தமிழீழப் போர்",நிச்சியமாகச் சிங்கள இனத்தின் வெற்றியாகப்பட்ட அரசியலொன்றும் புதுமையானதோ அல்லது மாபெரும் கொடுமையென்றோ எடுப்பதற்கில்லை!;இந்தவுலகத்தின் வரலாற்றில் போரும்,சாவும் வர்க்க  அரசியலாகவே விரிகிறது.

"இந்தியா இலங்கையில் மக்களைப் பாலியற் பலாத்தகாரஞ் செய்ததா, அன்றிக் கொன்றதாவென்றும்",அன்றி,"அங்ஙனம் எதுவுமே நடக்கவில்லை."அஃது,"தமிழ்ப் பாசிசத்தின் பொய்யுரை" என்றுஞ் சொல்பவர்களைக் காட்டிலும் பெரும் ஆபத்தானவர்களை மிக எளிதாக அறியக் கூடியதாகவிருக்கவில்லை!

அவர்களை,எங்ஙனம் அறியமுடியும்?

இதோ,"இந்தியாவின் துணையோடுதாம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.இந்தியாவைப் பகைக்காத அரசியலைத் தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவேதாம் தமிழ் மக்களது பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைக்கவேண்டும்.இந்திய-இலங்கை அரசை குறை கூறாமல்,திட்டித் தீர்க்காமல் அவர்களோடானவொரு இணக்க-இணைவரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்திய நலனுக்குப் பாதிப்பில்லாத அரசியல் தீர்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,எனவே,அத்தகைய அரசியலுக்குள் இந்தியாவை இழுப்பது அவசியம்."என்கின்றனரே பலர்,அவர்கள் தற்போது புலி,எலி,சிங்கம் என்ற எல்லா இயக்கத் தளங்களிலுமிருந்து இத்தகைய கோசத்தினடிப்படையில் ஒன்றாய்க் கைகோர்க்கின்றனரே,அவர்கள்தாம் இப்போது மிகப்பெரும் ஆபத்தானவர்கள்.

இத்தகைய கோசத்திலிருந்து புத்தக வெளியீடுகள்,முன்னுரைகளென எழுதித் தள்ளப்படும் இந்த இந்திய லொபிகளது இயக்கங்கள் தாண்டிய ஒருங்கிணைவானது இந்திய வல்லாதிக்கம் எங்ஙனம் அனைத்து இயங்கங்களை,அரசியல் கட்சிகளைத் தனது லொபிகளுடாகவும்,பினாமிகளுடாகவும் வழி நடத்தினரென்பதற்கு நல்ல சான்றாகிறது.

வரதராஜப் பெருமாள் தலைமையில் மண்டையன் குழுவை நிறுவிய இந்திய ரோ இறுதியில், முள்ளி வாய்க்கால்வரை அதே மண்டையன் குழுவைப் பல வடிவங்களில் நகர்த்தியது.எவரொருவர் வரதராஜப் பெருமாளை அல்லது இந்திய ரோவால் வழி நடாத்தப்பட்ட அனைத்து இயக்கத் தலைமைகளை வழிபடத் தொடங்குகிறாரோ அவர் நிச்சியம் இந்தியாவால் களத்துக்கு இறக்கப்பட்டவரே.

இந்த வரிசையில், இலங்கையில் போராட்ட அநுபவங்களைச் சொல்பவர்களும்,புலியிலிருந்து புதிய அரசியலைச் சொல்பவர்களும்,படைப்பாளிகளென்ற போர்வையில் இந்தியாவுக்கு விசுவாசமாகக் கருத்துக் கட்டுபவர்களும் ஏராளம் பேர்கள் புலத்திலும்-நிலத்திலும் கால்பதித்து வருகின்றனர்.



இந்திய இராணுவம் இலங்கையில் பாலியற் பலாத்தகாரம்,கொலை,கொள்ளையில் ஈடுபடவே இல்லை என்று வாதிப்பவர்களைக்காட்டிலும்,இந்தியாவோடிணைந்தும்,இந்திய அரசின் உதவியுடனும் தீர்வு செய்வது சாத்தியமான வழி என்பவர்களேதாம் இந்திய இராணுவத்தின் அனைத்து மனித விரோதச் செயலையும் ஒருங்கே ஆதரித்து,வரவேற்பவர்கள்!இவர்களை விட்டுவிட்டு,இந்தியப் பார்பனியத்தின் அடிப்பொடிகளை-ஜெயமோகன்களைச் சாடி என்ன பயன்?இவர்கள் தமது வர்க்க-சாதியத் திமிரில் அதைச் செய்யும் அரசியலையேதாம் பண்டுதொட்டுச் செய்தும் வருபவர்கள்.இதைக் கடந்து இவர்கள் பரந்துபட்ட மக்கள் நல அரசியலுக்கு வரவேமாட்டார்கள்.சோவை திருத்த முடியுமா?;ஜெயமோகனுக்கும் சோவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காட்டிட முடியும்?

"இந்தியாவோடு இணைந்து,இந்தியாவின் தயவில்,இந்தியாவைப் பகைக்கமால்,இந்தியாவின் தலையீட்டில்"என்று நியாயம் அளக்கும் நபர்கள்தாம் முழுமையாக இந்திய இராணுவத்தின் அனைத்து அட்டூழியத்தையும் இலங்கையில் நியாப்படுத்திக்கொள்கின்றனர்.முதலில் இவர்களது அரசியலையும்-குரலையும் கவனியுங்கள்;ஜெயமோகன்கள் நேரிடையாகவே பார்ப்பனிய நலத்தினது கருத்தியலாளர்கள்.அவர்களை விமர்சிப்பதென்பது "இந்தகைய நமக்குள் இருக்கும் " லொபிகளைக் கவனத்திலிருந்து தவிர்ப்பதில் முடியும்.

பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, "தமிழீழ"ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,போராட்ட வரலாறு-அநுபவங்கள் தொகுப்பது,இலக்கியம் படைப்பது;அதனதன்வழியாக தாம்சார் அரசுகளுக்கு ஆலவட்டம் பிடிப்பதுவரை மக்களது அழிவுக்குக் காரணமான "ஈழப்போராட்டம்" ஒவ்வொரு நபருக்கும் தனது அடையாளத்தைச் சொல்லும் அநுபவமாக-அரசியலாக இருக்கிறது.இப்படி தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாகவிது விரிகிறது.

இந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன , இன்று.

இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசுகளோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய-புதிய லொபிகளை உருவாக்குகிறது.இங்கே,புதியவர்கள் பழைய தலைகளது பெயரினூடாக அவர்களை மேதைகளாகவும்-மக்கள் தலைவர்களாகவும் பிரகடனப்படுத்தியபடி "படைப்பாளிகளாக-கவிஞர்களாக வலம் வருகின்றனர்.இவர்களே வரதராஜப் பெருமாளைக்கூடத் தமிழ்பேசும் மக்களுக்கான பெருந்தலைவர்களென வகுப்பெடுக்கின்றனர்.இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டு இந்திய அரசையும் அதன் கூட்டாளிகளையும் இவர்கள் காக்க முனைகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இத்தகைய நபர்களது வருகையானது பல அரசியல்-இயக்க அமைப்புகளிலிருந்தும்,போராட்ட அநுபவங்களைக் காவி வரும் படைப்பாக்க முயற்சிக்குள்ளிலுருந்தும் ஒரு நரித்தனமான கருத்தாடல் முகிழ்க்கிறது.இது,இலங்கையின் சிறுபான்மை இனங்களது பிரச்சனைகளை மெல்ல இந்திய நலன்களோடு பிணைத்துக் கருத்தாடுவதில் இந்தியாவில் வதைபடும் பல நூறு சிறுபான்மை-பழங்குடி மக்களதும் போராட்டத்தையும் அவர்களது உரிமைகளையும் ஒரு தரத்தில் குழிதோண்டிப் புதைக்கின்றனர்.இந்திய "நலனைக் காத்தல்-அதற்கு எதிரானதற்ற" என்ற கதை பாடலினுள் இந்திய வல்லாதிக்த்தால் சிதைக்கப்படும் பல கோடி இந்தியச் சிறுபான்மை இனங்களதும் அடிப்படையுரிமையை இவர்கள் மறுத்தொதுக்கத் தயங்கவில்லை!

முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவு கூரும் மே 18 , எப்போதுமே இந்த "இந்திய லொபி" நிகழ்ச்சி நிரலை நிராகரித்து இந்திய-மேற்கு வல்லாதிகங்களது கயமையை நேரடியாக மறுத்து மக்களுக்கான அரசியலையும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான விடுதலைப் போர் அறை கூவலாக நினைவு கூர்தல் அவசியம்.அப்படி நினைவு கொள்ளப்படும்போது மட்டுமேதாம் தேசத்துக்கெனப் போராடிய அடிமட்டப் போராளிகளது தியாகம்-அவர்களது ஆன்ம வலு நமக்குள் சமுதாய ஆவேசமாக உருவாக முடியும்.இல்லையேல் இந்திய லொபிகளது மாயமான் காட்சிகளாகவே எல்லாம் மீளவும் நீர்த்துப்போகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.05.2012

Samstag, Mai 05, 2012

களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை!

"உழைப்பவர்கள் தம்மை விடுவித்துக்கொண்டு சுதந்திரமாக உலாவருவதற்கான விடுதலைப் போராட்டம் என்பது முதலாளித்துவத்தைப் பற்றி உழைப்பவர்கள் கொண்டுள்ள சிக்கலான உற்பத்தி - ஆன்மீக உறவுகளின் உயர்ந்த மட்டப் பிரகடனமாகும்.அதற்கு மற்றெல்லா உறவுகளையும்விட உழைப்பு என்ற ஒரு படைப்பே பொதுவானது."



இங்கு,எவர்கள் என்ற பிரச்சனையை விட்டுவிட்டு,எப்படி விலகுவார்கள்?எஜமானர்கள் விட்டு விடுவார்களா?என்று மட்டும் கேட்டு மேலே செல்லலாம்.

"" உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவைஇ தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்… அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றும் கூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.

அதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட  வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன்  போன்ற ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் அடையாளம் காண முடிகிறது."""


ஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் "துரோகிகள்" பட்டியல் நீளமானது!இத்தகைய பட்டியலை வாசித்தவர்களே இப்போது தியாகிகள்,போராளிகள் பட்டியலையும் வாசிக்க முனைகிறார்கள். களத்திலிருந்து இறுதிவரை விலகாதவர்கள் குறித்துக் களத்திலிருந்து இந்தியாவுக்கு, இராணுவத்துக்கு தகடு கொடுத்த புலிக் கவிபாடிகளோ நீண்டவொரு தகட்டைச் சொருகிக்கொண்டிருக்கின்றனர்.தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரையே ஒட்டக் கருவறுத்த இந்தக் கரையான்களைக் கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப் பிலிட்டுக் கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.


புலித் தகடு கருணாகரன் கோஷ்ட்டி சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப் போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"கவிஞர்"கருணாகரன-நிலாந்தன் எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!


இவர்கள்தாம் கடந்தகாலத்தில்"ஆய்வாளர்கள்"-அறிவுமேதைகள். தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம். சிந்திப்பதற்குள் நடந்த "தலைகீழ்"வரலாறாகிறதாம்.இந்தக் கருத்துக்களை காலச் சுவட்டில் பதிந்த கருணாகரனோ இப்போது புலிகள் செய்த விட்டேந்தி விடுதலை"ப்போரை-கைக்கூலி அடியாட்படைச் சேவையை மொழுமொத்த தமிழ் மக்களது போராட்டமாகத் தோல்வியாகக் காண்பிப்பதன்வழி,மக்களை மீளக் காயடிக்கும் நயவஞ்சகத்தைக் கொண்டிருக்கின்றார்.


புஸ்பராணியின் நூலுக்கான புண்ணியவானின் முன்னுரையோ மக்களது கடைசி நம்பிக்கையையும் தோல்வி கண்ட புலிகளோடு பொருத்தி அவர்களைச் செய்பாடற்று இருக்கும்படியும்,"உங்கள் போர்" தோற்றுவிட்டதாகவும் காட்டும்போது, அந்நிய அரசுகளது கைக்கூலிகளான தமது ஏஜெண்டு வேலைகளை மூடி மறைக்கின்றனர்.






அவர் கூறுகிறார்: " சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியங்களின் அடிப்படையில் அது விசாரணையைக் கோருகிறது. அந்த விசாரணையின் மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது. பொறுப்புக் கூறலும் விசாரணை செய்தலும் என்ற விவகாரங்கள் இன்று கூடுதற் பேசுபொருளாகியுள்ளன. ஆனால் இந்த விசாரணையானது வெளியேஇ எதிர்த்தரப்பின் மீதேஇ இலங்கை அரசின் மீதே  மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் நிலைப்பாடு.  இதற்கான நீதியும் வெளியே இருந்து கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதில் நியாயமுண்டு. ஆனால்இ இது மட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டச் சிதைவைச் சீர்ப்படுத்தி விடாது. அவர்களுடைய சமூக - அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தாது. இத்தகைய ஒற்றைப் படையான சிந்தனை எவ்வளவுக்கு நியாயமானதுஇ எவ்வளவுக்குச் சரியானதுஇ எவ்வளவுக்கு நடைமுறைக்குப் பொருத்தமானது ?"- டLTTE கருணாகரன்

புலிகளது தோற்றத்திலேயே அஃது, அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்"துரோகி"எனச் சொல்லிக் கொன்ற கூட்டம், இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்டியது  முள்ளி வாய்க்காலுக்குப்பின்.


இப்போதோ, இந்தக் கூட்டம் புலிவழியான போராட்டத்தை முழுமொத்த தமிழ் மக்களது போராட்டாமாகக் காட்டி பல்முனை நாடகத்தை அரங்கேற்ற முனைகிறது.புலியினது கைக்கூலி அடியாட்படைச் சேவையை ஈழத்தமிழர்களது போராட்டச் சிதைவாகக் காட்டுவதனூடாகப் புலிகளது அந்நிய அடியாட்படை வரலாற்றை மறைத்துத் தமது அந்நிய எஜமானர்களைக் காக்கவிரும்புகிறது-தொடர்ந்து தமது எஜமானர்களைத் தமிழ்பேசும் மக்களது மீட்பர்களாக்குங் கைகாரியத்தில் தமது பணியை முடுக்கி விடுகிறார்கள்.இதன்வழியேதாம் இந்தியாவைப் பகைக்காத தமிழரது போராட்டம் அமையவேண்டுமெனவும் பாடம் புகட்டுகின்றனர்.இதைச் சமீபகாலமாக நிலாந்தன்,கருணாகரன் போன்றவர்ர்கள்மட்டுமல்ல யாதீந்தரா வென்ற புனைபெயருக்குள்ளும் தலை புதைத்துப் பரப்புரையாக்கிக் கருத்துமட்டத்தில் அதையொரு அரசியலாகவும் முன் தள்ளுகின்றனர்.


இந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.

" போராட்டம் சிதைந்திருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது என்றால்இ அதற்குக் காரணம் போராட்டத்தினுள்ளே தவறுகளும் குற்றங்களும் குறைபாடுகளும் நிரம்பியுள்ளன என்றே அர்த்தமாகும். வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள்இ சிதைப்புகளுக்கு நிகராக உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் விடப்பட்ட தவறுகளும் போராட்டத்தைச் சிதைத்துள்ளன. வெளிநோக்கி விரிந்திருக்க வேண்டிய போராட்டம் உட்சுருங்கியுள்ளமைக்கு இவையே காரணம். அவ்வாறெனில் அதனுள்ளே இருக்கும் குறைபாடுகளையும் தவறுகளையும் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைக்கு சாட்சியங்கள் அவசியமானவைஇ முக்கியமானவை. இந்த விசாரணை வெளியே இருந்து செய்யப்படுவதையும் விடஇ அமைப்புகளின் உள்ளேஇ கட்சிகளின் உள்ளேஇ போராட்டத்தில் ஈடுபட்ட - ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளேயும் நடக்க வேண்டும்.  விருப்பு வெறுப்புகள்இ உடனடி இலாப நட்டங்களுக்கு அப்பால்இ அப்படிச் சுய விசாரணைகளைச் செய்தாற்தான் தவறுகளைக் களையலாம். பிரிவுகளுக்கும் சிதறல்களுக்கும் காரணமான பகைக் கூறுகளைத் தவிர்க்கலாம். நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம். பின்னடைவுகளைக் கடக்கலாம்."  -LTTE  கருணாகரன்



புலிகளது தோல்விக்குத் தமது கைக்கூலிச் செயற்பாடுகளும்,அந்நிய அரசுகளுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்ட தமிழ் மக்களது போராட்ட நியாயத்தைக் குறித்தும் மௌனிக்க வைக்கும் இந்த ஈனத்தனமானது, புலிகளது கீழ்மட்டப் போராளிகளைத் தாம் எங்ஙனம் அந்நியப் படையணியாக்கியதென்பதை வரலாற்றிலிருந்து மறைப்பதன் உள் நாடகமாகும்.இதன்வழி மீளவும், தமிழ்பேசும் மக்களது பெயரைச்சொல்லி அவர்களைக் காயடிக்கும் கபடம் நிறைந்த இந்திய அரசினதும்,உளவுப்படையினதும் இன்னொரு சுற்றைக் காவிவரும் இந்தக் கருணாகரன்கோஷ்டி மிக ஆபத்தான பேர்வழிகள் என்பதை நான் மீளச் சுட்டுகிறேன்.


இத்தகையத் தகட்டுப் புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.


இவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது, அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்"ஈழமென்றும், தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் "அதியுன்னத"மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும், சரணடைந்தும்-வார்தைகளினால்  தமது வேசத்தைக் கலைத்தபோது"அவற்றை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது பெயரால் பொதுமைப்படுத்தி,உள்ளே ஏற்பட்ட தவறுகளாகக் காட்ட முனைவதில் எந்த அந்நிய அரசைக் காக்க முனைகின்றனர்?


முழு மக்களதும் தவறாகப் புலி இயக்க வாதத்தையும் அதன் கைக்கூலிப் போராட்டப்பாத்திரத்தையும் தணித்துக் கருத்துக்கட்டியபடி தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.


"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
 அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
 இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
 எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!


இருள் சூழ்ந்த நாளிகையிலே
 பலரைத்தின்றுவிட்டு
இந்தியாவிலும்,கிளிநொச்சியிலிருந்தும்
 இரை மீட்கிறாய்" இன்று.



"குற்றங்களாலும் தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிரப்பப்பட் டுப் பெரும் சிதைவைச் சந்தித்திருக்கும் ஈழப்போராட்டத்தில்இ  பத்துக்கும் உட்பட்ட சிறிய எண்ணிக்கையைக் கொண்டவர்கள் மட்டுமே தங்களின் போராட்ட சாட்சியங்களை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தே இந்தச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அல்லது தாம் இயங்கிய அமைப்புகளில் இருந்து விலகிய நிலையில்இ செயலாற்றும் விசைப்பரப்பிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தே தங்களின் இந்தச் சாட்சியங்களை அளித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சுயவிசாரணைக்கும் சாட்சியமளித்தலுக்கும் இவர்கள் இன்று தம்மைத் தாமே உட்படுத்தியுள்ளனர்."


முதலில் புலிகள் செய்த போராட்டத்தைக் கருணாகரன்"ஈழப்போராட்டம்"(சுயநிர்ணயத்துக்கான)என்று பொதுமைப்படுத்துவதில் மிகக்கவனமாக இருக்கிறார்.இதன்வழி சுயநிர்ணயத்துக்கான தமிழ்பேசும் மக்களது போராட்டம் என்பது காலவதியாகியது என்ற இந்திய மேலாதிகக்கக் கருத்தியலை மெல்ல மக்கள்மத்தியில் மொழிகிறார்.அதை எவரூடாக மொழிகிறாரென்றால் அங்கென்றுமிங்கொன்றுமாக வரலாறெனக் கொட்டப்படும் வெறும் அநுபவவயப்பட்ட கருத்துக்களைச் சொல்லும் நபர்களது தயவிலிருந்து, இவற்றைச் சொல்கிறார்.இதுவரை புலியினது மர்மத்தையே கலைக்முடியாதிருக்குமொரு சூழலுக்காக முழுமொத்த உறுப்பினர்களையும் கொன்று குவித்த அந்நியக் கைக்கூலிகள், அந்தத் துணிவிலிருந்தே வரலாற்றைக் குறுக்கும் நெடுக்குமாக வெட்டியொட்ட முனைகின்றனர்.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில்தம்மால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களை தமது நோக்கத்தை ஓரளவு தகவமைத்துபோது வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.

இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் சுயநிர்ணயத்துக்கான-சிங்கள இனவாதவொடுக்கு முறைக்கெதிரான போராட்ட ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம். அன்று,இந்திய அரசால் ஆயுத இயக்கங்களாகத் தோற்று விக்கப்பட்ட அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் எஞ்சிய கைக்கூலி அமைப்பினால்நடாத்தப்பட்ட எதிர் புரட்சிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது,அந்நிய அரசினது நலனுக்குட்பட்டும், இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த  முனைந்த சதிமிக்க அரசியலால் இலங்கையின் அனைத்து மக்களும் அழிவுற்றார்கள்.இதற்கு நல்லவுதாரணமானது: அநுராதபுரப்படுகொலையும்,யாழ் முஸ்லீம் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலும்-கட்டாய வெளியேற்றமு மாகும்.


முஸ்லீம் மக்கள மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களும் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு கைக்கூலிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் செய்யும் போலி வரலாறே இந்தப் புலிகளது அழிவை முழுமொத்த மக்களது தவறாக வர்ணிக்கும்ஆலோசனைகள்-அரசியல்கள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.


நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும்அந்நியச் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஒன்றுபட்டவொரு புரட்சிகரமான கட்சியின் வரவை அவர்கள் எப்போதும் அநுமதியளிக்கத் தயாராகவில்லை!


இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி, நமது போரிடும் ஆற்றலைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.இவர்களே இன்று கிழக்கில் ஞானமாகவும்-கருணாவாகவும்,பிள்ளையானாகவும் உருபெற்றபோது வடக்கில் கருணாகரன் நிலாந்தன் போன்றோர்கள் கல்வி மட்டத்தில் இறங்கி விளையாடுவது மிகத் தந்திரமானது. முள்ளி வாய்க்காலுக்குப் பின்பான வரலாற்றுக் கட்டத்திலெழும் அனைத்து ஆக்கங்களிலும்,அறிவுசார் எழுத்துக்குள்ளும் இவர்கள் திடிரெனப் பிரவேசிக்கின்றனர்.அந்த எழுத்துக்களது திசையையே மாற்றியமைக்கும் வியூகத்தோடு திறம்படவியங்கும் இவர்களை மெல்ல உள்வாங்க வேண்டிய நிர்பந்தத்துள் மக்கள் இருத்தி வைக்கப்படுவது கெடுதியானது.


"அப்படியாயின் தொடர்ந்தும் தோல்விகளும் அழிவும் பின்னடைவும் சிதைவுந்தானா? இந்த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும்? விடுதலையைப் பெற முடியும்? சுதந்திரத்தை அனுபவிக்க இயலும்? சுயவிசாரணை என்பதும்இ சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது? எப்படி விடுதலையைப் பெறுவது?

இந்தக் கேள்விகள் இன்று பகிரங்கத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கவனிக்கப்படவும் இல்லை. இதுதான் மிகமிகச் சோகமானது. இந்தப் பின்னணியிற்தான் இங்கே இன்னொரு சாட்சியாகஇ ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஷ்பராணி  தன்னுடைய சாட்சியத்தை அளிக்க முன்வந்துள்ளார். அவருடைய சாட்சியமாக ‘அகாலம் : ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’ என்ற வரலாற்றுப் பதிவு இங்கே முன்வைக்கப்படுகின்றது."


புலிகள் நமது வரலாற்றில் "தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது" பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத் தினதும், இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளை பொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில், மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களே!இது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்!
இத்தகையொவொரு அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை தேசியச் சக்தியாவும்,மக்கள் படையாகவும் வர்ணித்த கருணாகரனோ இன்று புஷபராணியினுடைய"போராட்ட"அநுபவதைக் குறித்து முகவுரைவெழுதும்போது யாருடைய சேவையில் இதுவரை இவர்களது போராட்ட அநுபவங் மையங்கொண்டிருந்தனவெனக் கேட்டுத் தொலைத்தால்"நாய்கள் பூனைகளோடு கூடுவதில்லை"என்ற மொழிவழி இவர்களது கரச் சேவையின் கூட்டுப் பொதுத் தளத்தில் புரியத் தக்கதே!

யாருடைய தோல்வியையும்,போராட்டத்தையும் குறித்து சுய விசாரணைக்கு அழைக்கின்றார்.எவருடைய இரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருத்துவத்தை கருணாகரன் மச்சான் பேசுகிறார்?மக்களே பங்குபெறாத புலிவழிப் போராட்டத்தில் எந்த மக்களது தோல்வியைப் பேசச் சொல்கிறார்?


அதைத்தானே நீங்கள் இதுவரை செய்து முடித்தீர்கள்?


மக்களைத் தோற்கடித்த பின்புதானே புலிகளது இருப்புச் சாத்தியமாச்சு?பின்பு,நீங்கள் தோற்கடித்த மக்களது கதையை நீங்கள் பேசுவதுதானே நியாயம்.அதை நீங்களே பேசுவதைத் தவிர வேறுயாரால் செம்மையாகச் செய்யமுடியும்?.


எப்படிப் புலிகளான அந்நியக் கைக்கூலி அமைப்பு மக்களைத் தோற்கடித்ததென்பதை அதன் உச்ச பரப்புரைக் கவிஞர் நீங்கள்தாம் பேசியாகவேண்டும்.எப்படி அந்நியக் கூட்டை இயகத்துக்குள் உள்வாங்கி, அந்நியர்களது நலனுக்காகச் சிறார்களைக் களத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தீர்களென்று கூறுவதிலிருந்து தொடருங்கோ.அதுவே,நியாயமான முறையில் நமது மக்களால் விசாரிக்கப்பட முடியும்.


"எச்சங்களில்
 "எந்த எலும்பு" உனது உறவினனதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
 எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"

இதை எழுதிய எனது மை உலர்வதற்குள்ளேயே,உனது பிதற்றல் எனது செவியோரம் வந்து தொலைகிறது.காலம் எவ்வளவு  வேகமாக நகர்கிறது!



"உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது”  என்ற புஷ்பராணியின்  வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. அது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியத்தோடிருக்கும் ஓர் ஈழ விடுதலைப் போராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும்இ எவ்வளவோ தியாகச் செயல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின்  முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்!"


இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய-மேற்குலக அந்நிய நலன்களது புவியியற்அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம்தமிழர் மகா சபையாக இருந்தாலுஞ்சரி  தமிழரசுக் கட்சியானாலுஞ்சரி அல்லது அதன் தொங்கு சதைகளான தமிழ் இளைஞர் பேரவையாகவும் இருந்தாலுஞ் சரி தோன்றிக்கொண்டன.இவை சுயமாக பரந்துபட்ட தமிழ் மக்களது பிரச்சனையிலிருந்து புரட்சிகரமாகத் தோற்றங்கண்ட கட்சிகளோ,அமைப்போ கிடையாது.மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் மட்டுமல்ல நமது தமிழ்ச் சமுதாயம் சாதியரீதியாகவும் பிளவுண்டு கிடந்தபோது அவற்றைப் புரட்சிகரமாக அணிதிரட்ட வக்கற்ற இந்த நவலிபரல் பொருளாதாரத்தின் கள்ளக் குழந்தைகளான கட்சிகள் எவருக்காகவோ உணர்ச்சி அரசியலூடாகப் பரந்துபட்ட மக்களைக் கவரும் மொழிவாரி வெறியைக் கிளறி அரசியல் செய்தனர்.அந்த அரசியல் பேரத்தில் தோற்றுக்கொண்டிருந்தபோது"தமிழீழம் " கோசமாகிறது. அதையே இந்தியப் பிராந்திய நலனானது மிக நுணுக்கமாகக் கையகப்படுத்தி இலங்கையில் தனது கைவரிசையை இன்றுவரை தொடரும்போது"உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தான் செய்கிறது"என்பது எவருக்கான இலட்சியம்?எதற்கான கண்ணீர் என்பதைக் களத்தில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களது குழந்தைகளது உடல்களில் உரைத்துப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்!


"இந்த நிலைஇ போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத் தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப் பெருங்காடாகியுள்ளது. ஆனால்இ இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகின்றது."


இன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி "ஈழப்போரை"இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்?புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று "ஈழப் போராட்டம்"என்று தமிழைத் தவிர்த்துக் தகடு கொடுக்கின்றனர்.கருத்தியல் பரப்பைப் பாருங்கள்.தமிழீழம் என்றனர் பின்பு ஈழமென்று ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பான நபருக்கேற்பக் கோடுகளை வரைகின்றனர் புலிகள்.

இந்தப் புலிப்பினாமிகளின் காரியவாத அரசியலானது "ஈழப்போராட்டத்தின் தோல்வி" சிதைவு குறித்துப் பொதுப்படையாகத் தமிழ் மக்களை அழைத்துக் கருத்துக்களை உருவகப்படுத்துகிறது.ஈழப்போராட்டத்தின் சிதைவுகுறித்த துக்கம் குறித்த உண்மையைத் தமிழர்கள் உணரவில்லையாம்.தமிழ்பேசும் மக்கள் அதை ஏன் உணர்ந்தாகவேண்டும்?அவர்கள் தம்மிடமிருந்து தட்டிப் பறித்த தமது குழந்தைகளது அழிவின் துக்கத்திலே மூழ்கிக் கிடக்கும்போது அவர்களைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலையுறாத ஈழப்போராட்டம் குறித்து எவர் துக்கிக்க வேண்டும்?அதையும் தமது எஜமாருக்கேற்ப கருணாகரனே தீர்மானித்தும் விடுகிறார்.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு "அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக"க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்.


"புஷ்பராணி தனது சாட்சியத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றார்: “மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது.”


தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.

இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம்! ஈழவிடுதலை இயக்கங்களின்  எழிச்சிகள் அந்நியச் சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன. இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து  தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.ஆனால், தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவாதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது, அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரைப் புலிகளை வைத்துக்காட்டிக்கொடுத்த இந்தியாவும்,மேற்குலகமும் இன்று தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கியதற்குப் பொறுப்பானவர்கள்.இதைப் புஷ்பராணி அநுபவமாகப் பேசியிருந்தால் நிச்சியம் இந்தக் கருணாகரனிடம் முன்னுரை வேண்டிக் குஞ்சங் கட்டியிருக்கமாட்டார்.

தமிழ் பேசும் மக்களை இரத்த வெள்ளத்தில் நீந்தவைத்த அந்நியக் கைக்கூலிப் புலிப் பிரமுகர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் இந்திய-மேற்குலக அநுதாபிகளும்இன்றும் "ஈழத்தை" சொல்லித் தாம் தப்புவதற்கான அரசியலைச் செய்யப் பற்பல புனைவுகளைச் செய்கின்றார்கள்.இதைக் குறித்து மௌனித்திருக்க முடியுமா?

தமிழ்ச் சமுதாயத்தின் முழுத் தோல்வியாகப் பகரப்படும் இந்த அந்நியக் கைக்கூலிகளது தமிழ்ச் சமுதாயத்தின் உரிமை மீதான காட்டிக்கொடுப்பை,ஈழப்போராட்டத்தின் பெயரால் தோல்வியென வகுப்பெடுக்கும் இத்தகைய கயவருக்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்:

தமிழ்ச் சமூகத்தை இத்தகைய முறையில் மொட்டையடிக்கும் வலு புலிகளுக்கும் அந்நியச் சக்திகுளுக்கும் வாய்க்கப் பெற்றதற்கு,தமிழ்ச்சமுதாயத்துள் நிலவிக்கொண்டிருக்கும் பழைய ஏற்றதாழ்வுகளும்,விரோதங்களும் காரணமல்ல.மாறாக,இஃது தமிழ்ச் சமுதாயத்துள் உருவாகிய ஒரு உத்தேச ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான காரியத்தின் விளைவாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

05.05.2012

Sonntag, April 29, 2012

மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...

மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...

வரும் மே 1-2012  ஊர்வலத்துள்பாசிச இலங்கையை அரசை அம்பலப்படுத்துவதோடு ,மதம்,இனஞ் சார்ந்து ஒடுக்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தையும் அதன் கூட்டணிகளையும் மேற்குலக மக்கள் முன் அம்பலப்படுத்துவது அவசியமானது.

இன்று, இலங்கைத் தீவெங்கும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குள் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் அநாதவராக விடப்பட்டுள்ளனர்.

மாறிவரும் ஆசியப் பொருளாதாரச் சூழலுள்ஆசியப் பொருளாதாரக் கூட்டணியோடு சிங்கள ஆளும்வர்க்கம் கண்ட சமரசங்கள்,விட்டக்கொடுப்பு,வெற்றிகள் என்பது இலங்கைச் சிறுபான்மை இனங்களை வெறி கொண்டு, ஒடுக்கும் வழி முறைகளைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு " இலங்கையை தென்னாசியாவில் இன்னொரு இஸ்ரேலாக" மாற்றும் சகல உரிமையையும் வழங்குகிறது.

இந்த வழங்கலை இந்தியா-சீனா,இருஷ்சியா போன்ற நாடுகள் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற  "Shanghai Cooperation Organisation or SCO" கூட்டணித் தலைமை வழங்கி விடுகிறது.

அண்மைக் கிழக்கு வலயத்துள் மேற்குலக-அமெரிக்க " NATO "ஒத்துழைப்போடு இஸ்ரேல் எங்ஙனஞ் செயற்படுகிறதோ அங்ஙனமே இலங்கையும் செயற்படுகிறது.இதுவொரு ஆபத்தான சூழலுக்குள் இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தள்ளி விட்டிருக்கிறது.


இன்று தம்புள்ளப் பள்ளி வாசல் பிரச்சனைக்கு முன்னமே முஸ்லீம் மக்கள் தொடர்ந்து சிங்கள மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.எனவே,இன்றைய முஸ்லீம் மக்களது இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான இந்த எதிர்ப்புப் போராட்டத்துக்கு துணை நிற்பது இலங்கையின் பிரதான சிறுபான்மை இனமான தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானதும்-தார்மீகக் கடமையாகவும் இருக்கிறது.

வரலாற்றுத் தவறுகளைத் தள்ளி வைத்து, நாம் ஒன்றுபடும் நேரம் நெருங்குகிறது.இந்தச் சூழலுள் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் கருத்தரங்குகளை நடாத்தும்படி கோருகிறோம்.அதுசார்ந்து அடையாளப் போராட்டங்களைச் செய்வதும்,இதன் வாயிலாகச் சிங்கள ஆளும் வர்க்கத்தை வரும் மே 1 இல் உலகு தழுவி அம்பலப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

இந்த அறைகூவல் ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனத்துள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் நாம் என்ற அடிப்படையிலேயே நாம் முன்வைக்கும் உரிமையோடும், அவசியத்தோடும் விடப்படுகிறது.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.04.2012

Montag, April 09, 2012

குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?

//"கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது"//


ரொம்ப மெலினப்படுத்தப்பட்ட கருத்து.

குருபரனது மௌனம் கலைகிறது தொடர் இயக்க அராஜகவாதம்-உட்கட்சி ஜனநாயகமின்மைசார்ந்த படுகொலை அழிவு, அரசியலை இவ்வளவு மெலினப்படுத்திப்பார்பது மிகக் குறுகிய பார்வையாகும்.

உண்மையாக? பரம்பரைக் காரணிகள்,பண்பாட்டுணர்வு,ஐதீகம்தாம் படுகொலை-அராஜகத்தைத் தொடர்ந்து தீர்மானிப்பது?

புத்தர் அனைத்துக்கும் ஆசைதாம் காரணமென்கிறார்.ஆசை,பொருள் சார்ந்த உணர்வாகிறது.புறம் இல்லையெனில் அகவுணர்வு படிமமாக முடியாதென்பதில் புத்தர் பெருமையான சிந்தனையாளர்.ஆகையால் அவர் சொன்னார்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என.

சமீபத்து மார்க்ஸ் உரைத்தார்: "வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பது"என.

"வன்முறையுணர்வின் வேர்களை "எமது "கலாச் சாரத்திலும், ஐதீகங்களிலும்,பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது" இத்தகைய கருத்தைக்கொண்டிருக்கும் ஒருவர் போராட்ட வரலாறு சொல்லும் அவலம் நமக்கு."பண்பாடு-கலாச்சாரம்" இரண்டும் முதலில் வெவ்வேறானதாகப் புரிந்தும் கொள்கிறார்;விளக்கவேண்டும் குருபரன்!

இதைத் தொடர்ந்து(அவரது கலைந்த மௌனத்தை) வாசித்தபோது, குருபரன் ஒரு பத்திரிகையாளனாகப் பலதரப்பட்ட தளத்தில் அநுபவப்பட்டிருப்பது புரிகிறது.அந்தத் தளம் அனைத்துமே அராஜகத்தால் நிரம்பிய தளங்கள்.இவை, அனைத்துமே பல அந்நியச் சக்திகளது கைகளுக்குக் கட்டுப்பட்ட தளங்களாக இருந்திருக்கிறது.

சுகமாக அவற்றைக் கேள்விகளோடு விலத்திச் சென்றுவிடும் குருபரன் பண்பாட்டிலும்,ஐதீகத்திலும் பழியைப்போட்டு விட்டுக்  கலைக்கப்படும் மௌனம் வெறுஞ் செய்திதாம்.




அஃது, அராஜகத்தின் பக்ககங்களையும்,அதன் நிகழ்வுகளையும் தொகுப்பதுதாம்.ஆனால்,நாம் அனைவருமே அறிந்த இலங்கை அரசியற் போக்குகளில் இந்திய-அமெரிக்க உளவு நிறுவனங்களது கைங்காரியம் எங்ஙனம் ஒரு இனத்தின் தலையை இயக்கங்களால் மொட்டையடித்தனவென்பதை "வரரலாற்றில் தடுக்கிக்கொண்டு" குருபரன் இங்ஙனம் பண்பாட்டில்-ஐதீகங்களில் பழி போடுதல் இந்தியப் பார்ப்பனியப் புனைவுக்கு ஒப்பானது சார்!

சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்,அதாவது 1987 ஆம் ஆண்டு ஒரு நாவல் வாசித்தேன். ரா.சு.நல்லபெருமாளது நாவல் அது.

பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் இந்த ஆசிரியரது "கல்லுக்குள் ஈரம்" நாவலை வாசித்துப் பெரும் மதிப்பு வைத்திருந்த நாவலாசிரியர் அவர்.அந்த ஆர்வத்தில் அவரது அனைத்து எழுத்துக்களையும் வாசிக்க ஆரம்பித்தபோது அவருக்கு நாவல் எழுதத்தெரியாதென்பதை உணர்ந்துகொள்ளும் நிலைக்குள் நான் வந்தேன்!; கூடவே,அவர் பெரு நிறுவன பார்ப்பனியத்தின் கோடியில் சாணாக்கியத்தைப் புரட்டும் நாவலாசிரியர் என்பதைப் புரிந்தும் வைத்தேன்.

ரா.சு.நல்லபெருமாளது கயமைமிகு "உணர்வுகள் உறங்குவதில்லை" என்னும் நாவலை 1987 ஆம் வருடம் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில்அந்த நாவலூடாக, பிரமாணனது நச்சு நாக்கை உணரத்தலைப்பட்டேன்.

உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சிதைத்து அவர்களது பரம்பரைக்குணமாகக் கொலையையும்-திருட்டையும்,அராஜகத்தையும் கற்பித்த நல்லபெருமாள்,எவ்வளவுதாம் இந்த மக்கள் கல்வி கற்று உயர்ந்தாலும் அவர்களது பரம்பரைக் குணம் அகலாது.அது, ஒரு பொழுதில் மேலெழுந்து கொலை-கொள்ளையில் ஈடுபடுமென முத்திராமன் என்ற பார்த்திரத்துக்கூடாக வெளிப்படுத்துவார்.அத்தோடு நிற்காது,உயர்ந்த பிரமணர்களால் போராடிப் பெற்ற சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவானது இழி நிலையடைந்ததற்குக் காரணம் இத்தகைய பரம்பரைக் குணமுடைய-ஜீன்ஸ்சுகள் அரசியலுக்கு வந்ததே காரணமெனவும் கூறுகிறார்.

அமைப்பைக் காப்பதற்காகச் சில அரசியல் வாதிகள்மீது பழிபோடும் சினிமாக்கள் நமக்குள் அதிகம்."நல்லவர்கள்-வல்லவர்கள்"ஆட்சிக்கு வந்தால் அகிம்சையும்,அரவணைப்புமே நிலவுமெனவும்,அமைப்பில் குழப்பமில்லையெனவும் வகுப்பெடுக்கும் இந்தியக் கருத்துநிலைகள் உலகு தழுவியதிலிருந்து பின்னப்பட்டதெனினும் பார்ப்பனியத்துக்கான சில சிறப்புக் கூறுகளும் உண்டு.அந்த"நல்லவர்கள்-வல்லவர்கள்"யாரென்று அவர்களே சொல்லும்போது பிரமாணனது பரம குருவான யக்ஞவல்க்கீயனும்-பிரவாஹானும் நம்முன் பிர்மவாதஞ் சொல்வது புரிகிறது.

குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?;கண்டுபிடித்துச் சொல்லுங்கோ!

குறைந்த பட்சமாவது ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றின் தகவல்களைச் சொல்வதற்கு முன்னாவது, சில நூல்களைக் கற்றாய்ந்து பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

"சத்தியத்தின் உரை கல் மூளையல்ல,பொருள்கள்-இயற்கைதாம் அந்த உரைகல்".

இனியாவது,இந்த மௌனம் கலைகிற தொடரைத் தொடர்வதற்குமுன் இராகுல சாங்கிருத்தியானின்"வால்காவிலிருந்து கங்கைவரை" வரலாற்று நூலை-கதைகளைக் கருத்தூன்றிக் கற்றுத் தொடர்வது செழுமையாக இருக்கும் குருபரன்.சமூகத்தின் இயக்கத்தைப் புரிவதற்கு இந் நூல் பெரிதும் உதவுவது.

நிலவுகின்ற சமூக வாழ்நிலைதாம் சமுகவுணவைத் தீர்மானிக்கிறது.புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டிவிடுகிறதென்பதெல்லாம் தற்போது நவகால சமூக-பொருளாதரவியல்-அரசியல் உளப்பகுப்பாய்வில் கெட்டிக்காரரானவர்களுக்குப் புரிந்து போவதில்லைதாம்.எனினும்,நமக்குள் பல ரா.சு.நல்லபெருமாளது சாதியக் கருத்தாளர்கள் நிறையவே உண்டு.

சமூகத்தை வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கண்ணோடு பார்ப்பது காலவாதியாகிப் போய்விட்டதாகப் புசத்தும் "தும்பி"களது இறைக்கை அடிப்பில்மகிழ்வுற்ற சிறார்கள், அந்தத் தும்பிகளுக்குப் பின்னே அணிவகுத்தோடுகிறார்கள்.

முத்துராமன் ஒரு நல்ல-தலைசிறந்த புதுக்கவிதை புனைவாளனாகவும், புரட்சிகரமாகக் கருத்தாடுபவனாகவும்,புரட்சிகரவாதியுமாகக் காட்டப்பட்டு இறுதியில், பரம்பரைக்குணத்தால் கொலைக்காரனாகவும், கள்வனாகவும், அராஜகவாதியாகவும் அவன் தொடர்ந்து-தொடர்ந்து இயங்குவது அவனது பரம்பரை இரத்தத்திலுள்ள குணமே-ஜீன்ஸ்சுகளே காரணமென்று பார்ப்பனிய வேதம் உரைத்த இந்திய அரசியலை குருபரனது கருத்தோடு உரைத்துக்கொண்டால் எங்கோவொரு லிங்கு கண்ணுக்குப் புலப்படுகிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2012

Donnerstag, April 05, 2012

முள்ளிவாய்காலிற் தோற்றது பிரபாகரனது பேதமை மட்டுமல்ல.

" நாம் புலியோடு சமரசஞ் செய்து புரட்சி நடாத்தக் கனவுகண்டால் அது எமது தற்கொலைதாம்"


ன்று நிலத்திலுள்ள மக்கள் மிகக்கெடுதியான அரசியல் சூழ்ச்சிக்குள் தனித்து விடப்பட்டுள்ளனர்.முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழ விடுதலை"போராட்டமெனும் சதிப் போராட்டத்தை நடாத்திய அந்நியச்சக்திகளது கைக்கூலிகள்,பிரபாகரனையும் அவரது கோரிக்கைகளையும் ஏமாற்றிக்கொண்டிருந்தபோது அதை ஊகித்துணரமுடியாத பிரபாகரனது புத்திக்குக் கிடைத்த தோல்வியல்ல இந்தச்சதி. இது முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைத்ததோல்வியாகிறது.இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும் பன்முகத்தன்மையில் ஒடுக்கப்படும்போது இலங்கையின் ஆளும்வர்க்கம் மற்றும் அந்நியக் கூட்டணியோடு இலங்கையின் முழுமொத்த உழைப்பாளர்களும் இனங்கடந்து இன்னொரு தளத்தில் மிக நேர்த்தியாகவும் ஒடுக்கப்படுகின்றனர்.இதைக் கடந்து சிந்திக்கும் தமிழ் தேசிய அரசியலானது,பழிவாங்கப்பட்ட கட்சி-இயக்க நலன்களை மீளப்பெறவே தமிழீழ விடுதலை குறித்த அதே பழைய அரசியல்போக்குகளிலிருந்து தன்னைத் தகவமைக்கிறது.இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைபுக்குள்ளும்,புலிகளது அரசியலிலிருந்து புரிந்துகொண்டு புலிவிசுவாசத்தின் வெளிப்பாட்டுத் தன்னார்வத் தமிழ்ச் சேர்க்கையின் இன்றைய அரசியலுக்குள்ளும் உணர்ந்துகொள்ளமுடியும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது வழமையான புலியினது அந்நியக் கைக்கூலிகளால் நாடத்தப்படும் ஒரு மடம்.அதைத் தாண்டி இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து அரசியல்ரீதியாகவும்,ஆன்மீக ரீதியாகவும் சிதைக்கும் விபரீதமான அந்நியக்கைக்கூலிகள் மக்களது அனைத்து வாழ்வு முன்னெடுப்புகளில் தம்மைப் பிணைத்து அந்த மக்களை அரசியல் ரீதியாகக் காய் அடிக்கின்றனர்.1990 களுக்குபின்"புத்திஜீவிகள்-பத்திரிகையாளர்கள்-சமூக ஆய்வாளர்கள்" என்போர் புலிகள் ஆயுதரீதியாக மக்களைக் காயடித்தபோது அதற்கெதிராகப் போராடவும்,புலிகளைக் கேள்வி கேட்பதையும் தவிர்த்து,புலிகளது அந்நியக் கைக்கூலி அரசியல் நடாத்தையை அநுமதித்தனர்.

இத்தகைய அநுமதித்தலூடாகத் தமிழ்பேசும் மக்களது வாழ்சூழலைத் தொடர்ந்து தமிழீழத்தின் பெயரால் அராஜகமயப்படுத்திக்கொண்டனர்.இதன் கட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதென எவராவது கருதுவோமானால் நாம் மீளவும் தவறிழைப்பதில் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் செல்வோம்.

முள்ளிவாய்க்கால் அழிவுக்குள் அழிக்கப்பட்டது பிரபாகரனது பேதமை மட்டுமல்ல.அங்கே அழிக்கப்பட்டது அந்நியச் சக்திகளுக்கெதிரான விவேகமும்தாம்.அந்த விவேகத்தை மெல்ல மெல்ல அழித்த இந்திய-இலங்கைக் கைக்கூலிகள் புலிகளது மேல் நிலை ஆலோசகர்களாகவும்-தளபதிகளகவும் இருந்து வந்தனர்.அவர்களை,இன்று கே.பி. என்றும் தளபதி கருணாவென்றும் இனங்காணும் நாம் இவர்களது இன்னுமொரு பகுதியையும் இனங்காணுவதில் பாராமுகமாக இருக்கிறோம்.இதை இனங்கண்டு நிலத்திலுள்ள மக்களுக்குச் சரியான திசைவழியில் போராடும் உண்மைகளைப் பறையாதிருப்போனால்,மீளவும், அதே அந்நியக் கைக்கூலி அமைப்புகளே மக்களைக் கொலைக்குத் தயாரிப்பதில்"தமிழ்பேசும் மக்களது உரிமை"சொல்லி அந்நிய நலன்களுக்கானவொரு[Indian platform] அடியாட்படை-ஆட்டு மந்தைக்கூட்டத்தைத் தொடர்ந்து தயாரித்துக்கொள்வர்.இதைத் தடுக்காத எந்த உரையாடலும் இனிமேல் அர்த்தமற்றது.இது,அரசியல்-இலக்கியம் என்ற அனைத்து மட்டத்திலும் எடுத்துச்செல்லப்பட்டு மக்களுக்குள் பகிரப்பட வேண்டும்.

புலியை ஒரு உதாரணத்துக்கு எடுத்தோமானால்(ஏலவே, அந்நியக் கைக்கூலி அரசியல்-இயக்கச் சேவையில் பல ஆயுதக்குழுக்கள் மறைமுகமாகவும்,நேரடியாகவும் ஈடுபட்டு அம்பலப்பட்டபோது இந்த அமைப்புகளை ஒரு தளத்திலும்,இன்னொரு தளத்தில் புலிகளை மிக நுட்பமாகத் தமது கைக்கூலியாக்கியது இந்திய-இலங்கை-மேற்குலக அரசுகள்.எனவே,ஏனைய அமைப்புகளைக்கடந்து, புலிகளது அமைப்பை உதாரணத்துக்கு எடுப்போம்.)அந்த அமைப்பு ஒரு கட்டத்தில்(2000க்கு பின்)சரியான திசைவழியில் செல்வதாகவும்,அவர்களே மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகவும் மேற்குலகில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிந்தனையாளர்களில் பலர் எமக்கு வகுப்பெடுத்தனர்.இவர்களால் ஏமாற்றப்பட்ட விவேகமான போராளிகள் அழிவது உறுதியென ஆக்கப்பட்ட பெரு வன்னி யுத்தமானது இறுதிவரைப் பிரபாகரனுக்குப் புலப்படாத அரசியலாகவே இருந்ததென்பதற்கு அவரது சரணடைவு-கொலையே நமக்கான சாட்சி!

இந்தத் திசையில் அந்நியச் சக்திகள் தற்போது கட்டிவைத்திருக்கும் அரசியற்றளம் (Political Platform ) என்பதை மிக நுணுக்கமாகக் கவனிக்க மறுக்கும் எந்தத் தமிழீழ விசுவாசியும் மீளத் தோற்பது மக்களது உயிரோடு விளையாடும் விளையாட்டே!புலிகள் அமைப்பை மிக நேர்த்தியகத் தமக்கான மறைமுகமான கைக்கூலியாக்கிய அந்நியச் சக்திகள் அவர்களைத் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களது உண்மையான போராட்டத்தலைமையாகவும் ஆக்கிக் காட்டினர்.அதுள் பிரபாகரனது இருப்பே அவர்களுக்குக் கைகொடுத்தது.பிரபாகரனது மாயையே இந்த அந்நிய வியூகத்தை மறைத்து அந்த அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை விடுதலை அமைப்பாகப் பலரை நம்ப வைத்தது.ஆனால்,பிரபாகரனுக்கு அடிபணிவதாக நடித்தபடி அந்த அமைப்பின் தளபதிகள்-அரசியல் மேல் நிலை ஆலோசகர்கள் பிரபாகரனது மலட்டுத் தனத்தைக்கொண்டு புலிகளை அந்நிய அடியாட்படையாக்கிக்கொண்டது.

இங்கே,இனம் காட்டப்படுவது மிக நேர்த்தியான அரசியல்சதி:

மேற்குலகத்தின் கைக் கூலியாக இருந்தவர்களுள் முக்கியமானவர்கள்:

  • 1: அன்ரன் பாலசிங்கம்,அடோல் பாலசிங்கம்,
  • 2: தமிழ்ச் செல்வன்-இவர்கள் இறுதிவரை அம்பலப்படாதிருப்பினும்பாலசிங்கம் ஏலவே அம்பலப்பட்டுப் பிரபாகரனால் பின்தள்ளப்பட்டு இந்தியக் கைக் கூலிகள்அந்த இடத்துக்கு வந்தனர்.அதையும் பிரபாகரனால் இனங்காண்பது அரிதாகவே இருந்தது.

இந்தியாவின் எடுபிடிகளாக புலிகளுக்குள் இருந்த மாத்தையா குழுவுக்குப்பின்பான கூட்டு:

  • 1: கருணா கூட்டு,
  • 2: கே.பி.கூட்டு. முள்ளி வாய்க்காலுக்கு முன்னும்,பின்னருமாக இவர்கள் வெளிப்படையாகிவர்கள்,

வெளிப்படாததும்,இன்னும் மக்களுக்காகச் சிந்திக்கும்,உழைக்கும் கூட்டாக இருக்கும் இந்தியக் கைக்கூலிகள்:

  • 1: திருநாவுக்கரசு-கருணாகரன்,நிலாந்தன் கூட்டு,
  • 2:மேற்குலகில் புலிப்பிரமுகர்களாக இருக்கும் நபர்கள்வரிசையில் முரளிதரன்

புலம் பெயர்ந்து மேற்குலகில்வாழும் தமிழ்பேசும் இலங்கையருள் அதிகமாகத் குறுந்தேசிய வாதத்துக்குள்மூழ்கியவர்களும்-புலிகளது பரப்புரையால் காயடிக்கப்பட்டவர்களும் இன்றைய மேற்குலகப் புலிப்பினாமிகளின் அதிகார நகர்வில் மேற்குலக லொபிகளாகவே இருக்கின்றனர்.ஐரோப்பியக் கூட்டமைப்பின் அதீத விசுவாசத்துக்குரியவர் புலிப் பினாமிகளில் முக்கியமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார்.

இங்கே,நாம் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி குறித்து கவனத்தைக் கொண்டோமானால்,அந்த மக்கள் முதலில் இனம்கண்டு அரசியல் நீக்கஞ்செய்யப்படவேண்டியவர்கள் இந்தியக் கைக்கூலிகளாக[A political platform is not only that typically widely distributed, with journalists and commentators being encouraged to quote from it when they analyze candidates and upcoming elections.] இருக்கும் "வெளிபடையாக" இனம் காட்டாதவர்களையே. இவர்கள்ரொம்ப ஆபத்தானவர்கள். முள்ளிவாய்க்காலில் புலி தோத்துக்கொண்டிருந்தபோது அடிக்கடி புலிகளது பரப்புரை ஊடகங்களால் கருத்தொன்று பரவியது.அந்தக்கருத்தானது புலிகளது அரசியல்வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசால் கருத்தியற்றளத்துக்கு எடுத்து வரப்பட்டது."தமிழீழத்தின் திறவுகோல் தமிழ்நாட்டில்தாம் உண்டு"என்பது அந்தத் திரு மந்திரம்.இவர்களேதாம் இப்போது கிட்டத்தட்ட மறைமுகமான இந்திய ஏஜன்டுகளாகத் தமிழ் பகுதியெங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

இவர்கள் இந்தியாவின் நலன்களை இலக்கைக்குள் தொடர்ந்து பதியம்போடும் மக்களோடு மக்களான கலைஞர்களாகிறார்கள்.இந்த மனிதர்களே சமீபத்தில் இலக்கிய வெளியீடுகள்-மதிப்பீடுகளெனச் செய்து தமது அரசியலை மிக நுணுக்கமாக முன்னெடுக்கின்றனர்.இந்த நடாத்தைகளை மிக நுணுக்கமாகக் கவனிப்போமானால்இந்தியா தனது எடுபிடிகளைப் பலமட்டத்தில்-பல வடிவங்களில் வைத்து இயக்கிவருகிறது.இவர்கள் அனைவருமே புலிகளது மேல்மட்டத் தலைவர்களாகவும்-கலைஞர்களாகவும் இருந்தவர்கள்.இவர்களுக்கு வெளியிலும் இந்தியக் கைக்கூலிகள் இலக்கிய வாதிகளாகவும்,தலித்தியவாதிகளாகவும் இருக்கின்றனர்.அவ்வண்ணமே,இந்தியா முன்னைய ஆயுத-அராஜகக் குழுக்களையும் இதுள் இன்னொரு தளத்தில் வைத்து இலங்கையின் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிக்குள் கட்டி வைத்திருக்கிறது.இதன் பின்னணியுள் நடந்தேறும் அரசியல் நமது மக்களுக்கு ஆபத்தானது.

"தமிழீழ"ப் போராட்டத்துள்புலிகளது பாத்திரம் நேர்மையாப் பேசப்பட வேண்டும்:

புலத்து-நிலத்துத் தமிழ்பேசும்மக்களுக்கு அரசியல் உரைத்தலென்பது மிகக்கடினம்.அவர்கள் அதிகமாகப் புலிகளது பொய்யான கருத்துக்களால் கடந்த கால் நூற்றாண்டாகக் காயடிக்கப்பட்டவர்கள்.இவர்களே,தொடர்ந்து கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு போன்ற இந்தியத் தாசர்களைப் புலிகளது விசுவாசத்துக்குரிய தோழர்களெனப் புரிந்து அணைத்துக்கொள்கின்றனர்.இந்தத் துணிவுதாம் அவர்களும் சாம்பற்றத்துவமுரைக்கும் நிலைக்கும் மேலாக இப்போது இலங்கை தழுவிய முறையில் கலா நிகவுழ்வுகளுக்குத் தலைமைதாங்கித் தமிழ் மக்களது ஊடக அறிவுக்கு ஆப்பு வைக்கும் காரியத்தில் முழுமையாக இறங்கி இந்தியச் சார்புக் கருத்துகளைத் தினமும் மக்களுக்குப் பழக்கப்படுத்துகின்றனர்.இங்கிருந்து நாம் தொழிற்படவேண்டிய கட்டாயமான பணி என்ன?

புலிகளது வரலாற்றுப் பாத்திரத்தைப் புனையும் புலம்பெயர் ஈழமக்களது இருண்ட அரசியல் குறித்தும் இந்தச் சந்தர்ப்பதில் உரைத்தே ஆகவேண்டும்.சமீபத்தில் புலிகளது அமைப்பில் பட்ட அநுபவங்களைப் புலிகளது ஆரம்பகால தன்னார்வக் கோஸ்டியின் உறுப்பினர் கணேசன் ஐயர் இனியொருவில் எழுதியிருந்தார்.அந்தத் தொடர்களை நூலாகியவர்கள், வெளியீட்டு விழாவின் மூலம் பலதரப்பட்ட வர்க்கத் தளத்தவர்களையும் உள்ளிழுத்து விமர்சனத்தைப் பகிர்ந்துகொண்டனர்.விமர்சனம் என்பது வெறுமனவே நிலவுகின்ற பெரு மக்கட்டொகையின் எண்ண அலைக்கொப்ப கப்பலோட்டுவதாகவே அனைவரும் செய்து முடித்தனர்.உண்மையில் புலிகளது வரலாற்றை நாம் தலைமுறை தலைமுறையாகச் சொல்லிக்கொடுக்கப்படவேண்டியவர்கள்.புலிகளென்ற அமைப்பின் வரலாற்று உள்ளடக்கத்தையும் அதன் போராட்டப் பாத்திரத்தையும் நமது வருங்காலச் சிறார்கள் கற்றறியவேண்டும்.இதன் அவசியத்தை உரைப்பதற்கு 1980 களுக்குப் பின் இலங்கையிற் பிறந்த தமிழ் இளையோரை மிக நிதானமாக உற்றறிந்தால் பொய்யினதும்,காயடிப்பினதும் பலம் பொருந்திய வினை, நமக்கு புரிந்து பேகும்.

80 களுக்குப் பின்பிறந்தவர்கள் புலியினது அனைத்துப் பாத்திரத்தையும் மறுத்துப் புலிகளது தலைவனது ஒளிவட்டத்துக்குள் மாட்டுப்பட்டுக்கிடந்தவர்கள்.அவர்களே,புலியினது அழிவுவரைப் புலிகள் தலைவனையும்,அந்தத் தலைவனது போராட்டச் செல்நெறியையும் மக்கள் போராட்டமாகவும்,"கரிகாலன் காலத்துள் தமிழீழம் சாத்தியமென" அனைத்து ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை-கருத்துக்களையெல்லாம்ஜீரணிக்கும் வலுவின்றி "எட்டப்பர்-துரோகி"என்றபடி தமிழ்பேசும் மக்களது தலையில் யுத்தத்தின் சுமையை ஏற்றினார்கள்.இவர்களுக்குப் புலிகளது ஒட்டுணித்தலைமையானது அந்நியச் சக்திகளால் இயக்கப்படுவதென நாம் உரைத்தபோது ,அவற்றைத் தட்டிகழித்தார்கள்.நம்மீது அவதூறு பொழிந்தார்கள்.நாம் மீளவும்,"புலிகள் தோற்பார்கள்"என்றபோது எம்மைப் பார்த்து,"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள்சிங்கள இராணுவத்தை வென்று தமிழீழத்தை விடுவிப்பார்கள்"என்று எழுதிக் குவித்தனர்? இந்த வினை எங்ஙனம் உருவாகியது?எப்படி இந்த இளைஞர்கள் காயடிக்கப்பட்டார்கள்? வேள்விக்கு வளர்த்த கடாவாகவே இந்தக் கூட்டம் இதுவரை இருக்கிறது.இவர்களேதாம் இப்போது நமது மக்களது யுத்த வாழ்வையும்-வலியையும் புனைவு இலக்கியமாக்கிறார்கள்.இத்தகையவர்களது அரசியல்-வரலாற்றுத் தெளிவே இந்த இலட்சணத்தில் இருக்கும்போது, இவர்களால் ஆற்றப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஏதோவொரு விசுவாசத்துக்குக் கட்டுப்பட்டு, உண்மைகளை இனங்காண்பதில் அநுபவக் கோளாறுடன் உரை அமைக்கின்றனர்.எனவே,புலியினது உண்மையான பாத்திரம் மிக நேர்த்தியாக எழுதப்படவேண்டும்.பொதுவெளியில் உரையாடப்படவேண்டும்.

சிங்கள ஆளும் வர்கத்தினது இனவாத ஒடுக்குமுறை நிகழ்வை வலிவுப்படுத்தியதும்,அதைத் தொடர்ந்து இலங்கைக் கூலிப்படையைத் தேசிய இராணுவமாகவும்,ஆக்கிய போராட்டச் செல்நெறியும்,வரலாற்றில் மிதவாதத் தமிழ்த் தலைமைகளது மேற்குலகச் சார்பு அரசியலது வினையின் பலாபலாத்தால் புலிகளென்றவொரு அமைப்புச் சுயவளர்ச்சியை மறுத்து முழுக்முழுக்க அந்நியச் சக்தியின் தயவில் தங்கி வைக்கப்பட்டதும் தற்செயல் நிகழ்வல்ல.இனவாத அரசியலுக்கெதிரானதும்,அந்த அரசியலது வினையால் மேற்கொள்ளப்பட்ட இனவொடுக்குமுறை வீரியத்துக்கெதிராகவும் போராடுவதென்ற பேர்வையில் அந்நிய நலன்களுக்காகப்பாடுபட்ட ஈழப்போராட்ட ஆயுதக்குழுக்களும்-கட்சிகளும் நமது மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றும்,சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்தும் தமிழ்பேசும் இனத்தை இலங்கையில் ஒட்ட மொட்டையடித்துச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்து, அடிமையாக்கியக் கொண்ட வரலாறு பேசப்படவேண்டும்-பகிரங்கமாக நாம் எமது மக்களுக்கு உரைக்கும் முதற் செய்தியானது,புலிகள் அந்நியக் கைக்கூலிகள். புலி இயக்கத்தின் மேல் நிலைத் தலைவர்களது இன்றைய அரசியல் சார்பே சாட்சியென்பதல்ல.அந்த அமைக்குள் நிலவிய போராட்டச் செல்நெறியும்,அவர்களால் அணுகப்பட்ட அரசியலுமே ஆழமாகப் பேசப்படவேண்டும்.அங்கே,இவர்கள் எப்படி அந்நிய அடியாட்படையாக உருவாகி வந்தனர் என்பதை மிக நேர்த்தியாக உரைத்தாகவேண்டும்.

இதைத் திட்டமிட்டு மறைக்கும் எந்தவுரையாடலும் புலிகளைத் தேசியப் போராட்டத் தலைமையாகவும்-மாவீரர்களாக்குவதும் மீளவும் நமது மக்களைத் தப்பான பாதைக்கு அழைத்துச் செல்லவே.அந்த வகையிற்றாம் இன்று, இந்தியக் கைக் கூலிகள் மீளவும் நமது மக்களுக்குள் வந்து திடமாக அரசியலை முன்னெடுக்கின்றனர்.

இவர்கள், இரண்டு இலட்சம் மக்களது அழிவுக்குப் பதிலுரைப்பதைத் தவிர்த்துவிட்டுப் புதிய தத்துவம் போதிக்கும் நிலை எப்படியுருவாகிறது?,திருநாவுக்கரசும்,கருணாகரனும்,நிலாந்தனும் எப்படித் தமிழ்ச் சமூகத்தின் முன் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்?,எப்படி இவர்களால் மீளமீள இந்தியாவுக்குச் சார்பான கருத்துக்களைப் பேச முடிகிறது?.எமது மக்களை கெடுதியாக வருத்தியவொரு கூட்டம்.மக்களது அனைத்து வளங்களையும் திருடிய கூட்டம்,குழந்தைகளைப் போருக்குள் புதைத்தவொரு கூட்டம் இன்னும், மக்களது நலனுக்காகவே அரசியல் பேசுவதாகப் பசப்பும் சூழ்நிலை உருவாகிறதென்றால் புலிகளது பாத்திரத்தை மக்கள் சரியாகப் புரியவில்லை என்பதே உண்மை!

புலியினது அமைப்பிலிருந்து போராட்ட அநுபவங்களைப் பேசமுனைபவர்கள் குறைந்தபட்சமாவது புலிகளது அந்நியக் கைக்கூலி அரசியலையும் பேசியே தீரவேண்டும்.மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடுவோமெனப் பயந்து விமர்சனத்துள் நாசுக்காகச் சொல்வதென்பது சிலருக்கு அவசியமாகலாம்.ஆனால்,பெரும் பகுதி மக்களது விடுதலையை விரும்புபவர்கள் உண்மைகளைக் கறாராகப் பேசவேண்டும்.ஒரு கைக்கூலி அமைப்பால் எத்தகைய வரலாற்றுத் துரோகம் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட முடியுமென்பதற்குப் புலிகளே உதாரணமாக இருக்க முடியும்.இவ்வளவு பெரிய இழப்பும்,அற்பணிப்பும் அந்நிய அரசுகளது அரசியல்-பொருளியல் நலனுக்கேற்பப் பயன் படுத்தப்பட்டதென்றால் அது உண்மையிலேயே மன்னிக்க முடியாத குற்றம்.இங்கே, புலிகளது பினாமிகள் இப்போதும் இந்திய-மேற்குலகக் கைக்கூலிகளாகவும்,மகிந்தாவின் விசுவாசிகளாகவுமிருக்கின்றனரென்றால் அவர்களை மக்கள் மத்தியல் அம்பலப்படுத்தி அரசியல் நீக்கஞ் செய்யத் தூண்டியாகவேண்டும்.ஆனால்,நிலாந்தன்,கருணாகரன்,திருநாவுக்கரசு போன்றவர்களோடு அரசியல் நடாத்தும் புரட்சிக்கரத்"தோழர்களை"என்னவென்பது?புலிகளது அந்நியக் கைக்கூலிப்படைப் பாத்திரத்தை மறைத்துக்கொண்டு,அவர்களைத் தேசியவிடுதலைப் போராளிகளெனச் சொல்லப்படும் வரலாறானது மக்கள் விரோதமாகும்.அதற்கெதிரான பெறுமிதிமிக்க உண்மைகள் பகிரங்கமாகப் பதியப்படவேண்டும்.அவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று புலிகளது மாயை தகர்க்கப்படும்போதுதாம் இத்தகைய இந்திய-மேற்குலகக் கைக் கூலிகளை முiறியடிக்க முடியும்.அதுவரையும் நாம் புலியோடு சமரசஞ் செய்து புரட்சி நடாத்தக் கனவுகண்டால் அது எமது தற்கொலைதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.04.2012





Sonntag, April 01, 2012

ஜனநாயகம்,பன்முகத்தன்மை பேசும் புலிப்பிரமுகர்கள்.

[இக்கட்டுரையானது பரவலாகப் பேசுவது அரசியல்-அராஜகம் குறித்து,இயக்கஞ்சார்ந்த தனிநபர்களது பயங்கரவாதச் செயற்பாடானது கருத்தியல்ரீதியாகவும் புரியப்படவேண்டியது.ஆயுதமெடுத்துப் பயங்கரம் புரிவதென்பதும்,பேனாவெடுத்து அத்தகைய பயங்கரத்தை-அராஜகத்தை நியாயப்படுதுவதென்பதும் வெவ்வேறானதில்லை.இரண்டினது வினையும் அழிவு அரசியலே.இங்கே,புலத்தில் அதிகமாக ஜனநாயக வகுப்பெடுக்கும் புலிப் பிரமுகர் நடராஜ முரளிதரனது கபடி விளையாட்டிலிருந்து ஓரளவு பேச வேண்டிய தார்மீகக் குரலாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.]


புலத்தில்,முன்னாள் சுவிஸ்ட்சர்லாந்து-இந்நாள் கனேடியப்புலிப்பிரமுகர் முரளிதரன் நடராஜா அவர்கள்,இப்போது ஜனநாயகம் குறித்தும்,பன்முக உரையாடல்குறித்தும் நிறையவே கூக்குரலிடுகிறார்.நிலத்தில்புலிப் பிரமுகர்களாக இருந்து மக்களைத் துவசம் செய்த கருணாகரன்,திருநாவுக்கரசு,நிலாந்தன் வகையறாக்களும் அவர்களது சர்வதேசத் தலைவர் கே.பி.யுங்கூட ஜனநாயகங் குறித்து நிறையவே பேசுகின்றனர்.இத்தகைய புலிப்பினாமிகளது கடந்த காலப் புலிப்பிரச்சாரகப் பரப்புரைகளையும் இப்போது விறாக்கியிலிருந்து தூசுதட்டிப் படிக்கிறேன்.ஈழநாதம் ஒலித்தவர்கள், அதை மூடி வைத்துவிட்டு மக்களுக்குள் மக்களாக ஜனநாயகத் தாகமெடுத்துத் தொடர்ந்து அழுகின்றனர்.எல்லாம் கருப்பு-வெள்ளை,சாம்பலெனவும் அவர்களால் நிறப் பகுப்புஞ் செய்து பேசப்படுகிறது.இவர்களது கடந்தகால அரசியல்-அந்நியச் சேவையும்,இந்நாள்வரைத் தொடர்ந்து உயிரோடு உலாவும் இவர்களது இருப்பினது அரசியலும் மிகுந்த சந்தேகத்துக்குரியது.

எட்டாம் வகுப்புக்கு அண்மித்த பாலகர்களெல்லாம் புலியாகப்பட்டத்துக்கும்,இவர்களுக்கும் பாரிய தொடர்புண்டு.வன்னிப் படுகொலையுள் அத்தகைய பால்குடிப் போராளிகளெல்லாம் பயங்கரவாதிகளெனக் கூறப்பட்டு, இலங்கைப் பாசிச இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.ஆனால்,இந்த முதிர்ந்த-முற்றிய புலிப் பிரமுகர்களெல்லாம் முன்னைவிடவும் துடிப்பாக நிலத்தில் உலாவர முடிகிறது.பாலகப் போராளிகளைக்கொன்ற சிங்கள-இந்திய அரசுகளுக்கு அந்தப் பாலகர்களைக் களத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்த இந்தப் பிரமுகர்களைக் குறித்துச் செஞ்சோற்றுக் கடனுக்கான நன்றியை மீளவும் எதிர்பார்த்து இயங்க, அனுமதிப்பதில் வெட்கமோ-வேதனையே இல்லை!அப்பாவிகளது குரல்வளைகளை நசித்த கயவர்கள் கருத்தியல்ரீதியாவொரு இனத்தைக் காயடித்தவர்கள் இப்போது நிறப்பிரிப்புத் தத்துவஞ் செய்கின்றனர்.

என்னவொரு அநியாயமான உலகம்!

இதுவரை தாம் சொல்வதே சரியானது.தாம் மட்டுமே தூய போராட்ட அமைப்புவெனக் கூறிக்கொண்டு,மாற்று அமைப்புகளைத் தடைசெய்து "துரோகிகள்"என்று கொன்று குவித்தார்கள்-இரயர் போட்டுக் குவியலாகக் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளை எரித்தார்கள்.அதையும்,தமிழீழத்தின்பெயரால் ஜனநாயகத்தன்மை என்றார்கள்.

யாழ்ப்பாண முஸ்லீம்களை, அவர்களது பிறந்த மண்ணைவிட்டு ஓடோட வெருட்டியடித்தார்கள்-கொன்றார்கள் புலிகள்!இதையும், நாம் புலம் பெயர்ந்து வாழும் மேற்குலகில் "சரியானது,முஸ்லீம்கள் சிங்கள அரசின் கைக்கூலிகள்"என்றும், அதையும் ஜனநாயகத்தின்பாலானதெனச் சொன்னார்கள் புலிகள்.

முரளிதரன் இவற்றை 2009 ஆம் ஆண்டுவரை நியாயப்படுத்தி, மக்களுக்குள் பிரச்சாரஞ் செய்தவர்.இப்போது,இவர்கூறும் "ஜனநாயகம்"இந்த வகையிலானதெனப் புரிந்துகொள்வதைத்தவிர வேறெதுவையும் முரளிதரனுக்கு வகுப்பெடுக்க முடியாது!

தமது காலடியில் அதிகாரம் இருந்தபோது,தாம் சொல்வதே "ஜனநாயகம்" என்ற புலிப்பிரமுகர் முரளிதரன் போன்றோர் இன்னும், மற்றவர்களுக்கும் இதைப் போதிப்பது அபத்தமானது.இவரே வலிந்து தமது புலிப் பாசிசச் சேட்டையை ஆதரித்த பால்குடிகளது(குறிப்பாகச் சயந்தன் கதிர்) தற்போதைய"நாவல்-சிறுகதை" தொகுப்புகளைத் தமது செலவில் பிரசுரஞ்செய்து, பினாமிப் பெயர்களுடாக அவற்றை தனிப்பட்ட நிறுவனத்தின் பதிப்பாகக் காட்டியபடி,அவற்றை வெளியீடு செய்வதென மக்களுக்குள் மீளப் புலிப் பாசசத்தை மென்மையான முறையில் தொடர்ந்து நகர்த்துகிறார்கள்.மக்களிடத்தில் தமது பாசிசச் சேட்டையை குறித்து விளக்கமளிக்கமுடியாத பாசிசப் புலிகள்-தம் வரலாற்றுப் பழியை,தவறை ஓத்துக்கொள்ள மறுத்தபடி தியாகமாக்கும் முயற்சியின்வழியில்,தற்போது மக்களது வாழ்வைத் தமது எழுத்துக்கேற்ப நீட்டியும்,முடக்கியம் இயற்கைவாதத் தன்மையுடன் நொந்தவர்களது விழிகள்முன்னே நகர்த்திக்காட்டித் தொடர்ந்து புலிமீதான ,அநுதாபத்தை வளர்த்துத் தம்மைத் தக்கவைக்கும் வியாபாரத்துக்குப்பெயர்"ஆறா வடு"மசிர்!

இது,மிக வலுவாக இனங்காணவேண்டிய நிகழ்ச்சி நிரல்.இதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த மக்கள்பாரா முகமாக இருந்து அநுமதிக்கும்போது,புலிகள்மீது செய்த அதே தவறைத்தாம் இந்த மக்கள் செய்து முடிக்கப் போகின்றனர்.

புலிகளது புதிய-புதிய போலி வடிவங்களை இனங்கண்டு,இவர்களை ஓடோட வெருட்டி அடிக்க வேண்டும்.இவர்கள் ஆபத்தானவர்கள்.

தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சிங்கள-அந்நிய அரசுகளுக்குக் காட்டிக்கொடுத்த கயவர்கள். இவர்களால் நமது மக்கள் இழந்த இலட்சக்கணக்கான பாலகர்களின்"ஆன்மா"நம்மை இன்னும் புலிகளை மன்னிக்காதே எனக் கூறிக்கொண்டே இருப்பதற்காக, அவர்களது பெற்றோரது கண்ணீரோடு நம்மெல்லோரையும் இறந்தவர்கள் அண்மிக்கின்றனர்.

எவரை மன்னித்தாலும் பாசிச ஈழ அராஜக இயக்கங்களையும்,குறிப்பாகப் புலிகளையும் எவரும் மன்னிக்கமாட்டார்கள்.அப்படி மன்னித்தால் தமிழ்பேசும் மக்களும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களும் இறுதியில் இலங்கை வரலாற்றிலிருந்து துடைத் தெறியப்பட்டுவிடுவர்!

புலிப் பிரமுகர் முரளிதரனைக் குறித்து மிகக் கவனமாக இருக்கவேண்டிய கட்டத்துள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்துள்ளனர்.ஏனெனில்,கடந்த காலத்தில் புலிகளையும்,அந்த அமைப்பையும்,ஜனநாயகப்படுத்திப் புரட்சிகரமான அமைப்பாக மாற்ற நாம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும்,எழுத்துக்களையும் "துராகிகள்-எட்டப்பர்கள்"எனக்கூறியபடி அந்த அமைப்பைத் தொடர்ந்து பாசிச அமைப்பாகவும்,மக்களது சுய நிர்ணயப்போரை,அராஜகப் போராட்டமாகவும் மாற்றியபடி, அந்நியத் தேசங்களுக்கும் ,சிங்கள அரசுக்கும் காட்டிக்கொடுத்த புலிப் பிரமுகர்கள் இவர்கள்.

இவர்களே, அந்த அமைப்பின் அப்பாவிப் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்க உடைந்தயாகச் சிங்கள-இந்திய அரசுகளுக்குள் இருந்துவிட்டு இப்போது,இந்திய-சிங்கள அரசுகளால் கண்டும் காணாமற் விடப்பட்டுள்ளனர். இவர்களே,கருணாகரன்,திருநாவுக்கரசு, நிலாந்தன்,முரளிதரன் போன்ற முகமூடிகளாவர்.இந்த மோசமானவர்கள்,புலியமைப்பை ஜனநாயகப்படுத்தும் எம்மெல்லாரதும் முயற்சியையும் எட்டப்பர் செயலெனப் பிரபாகரனுக்கு வகுப்பெடுத்தபடி அந்த அமைப்பையும்,பல்லாயிரக்கணக்கான தேசபக்த புலி அடிமட்ட இளைஞர்களையும் திட்டமிட்டுக் கொன்று குவித்த நயவஞ்சகர்கள்.

இவர்களை வரலாறு மன்னிக்குமா?

ஒரு கட்டத்துள் புலியமைப்பை தமது கைக்குள் வைத்துச் சிதைத்த திருநாவுக்கரசு,கரணாகரன்,கே.பி. , நிலாந்தன்,நடராஜா முரளிதரன் போன்ற பிழைப்புவாதக் கயவர்கள் (இவர்களது பட்டியல நூற்றுக்கணக்கானது.தலை மறைத்தபடி மக்கள் சொத்தோடு முதலாளிகளாகியவர்கள் பலர்.அவர்களை இனங்காட்டத்தக்க சூழலொன்று மிக விரைவில் வரும்.உண்மைகளை எவரும் மறைக்கமுடியாது!) ஒன்றுந் தெரியாத மனிதர்களாக உலாவருவது எவ்வளவு கபடமானது!

நாம்,முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவெனில்,சிங்கள அரசினது பாசிச இராணுவமானது எதுவுமே சரியாகத் தெரியாத பச்சைப் பாலகப் போராளிகளையெல்லாம் படுகொலை செய்தது. அந்தப் பாலகர்கள், வேள்விக்கு வளர்த்த கடாவாகப் புலி அமைப்பின் கட்டளைக்கமையப் போராடியவர்கள்.அவர்களே, சிங்கள இனவாதவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துள் கணிசமாக எதிர்ப்புக் குணாம்சமுடையவர்களாக இருந்தார்கள்.இவர்களே களத்தில் அநியாயமாகப் பலிகொடுக்கப்பட்டவர்கள்.அதுபோன்றே சரணடைந்தபோதும்,இத்தகைய கயவர்களால் காட்டிக்கொடுக் கப்பட்டுச் சித்திரவதைக்குட்பட்டுக் கொல்லப்பட்டவர்கள்.

ஆனால்,புலியினது பிரமுகர்களாக வலம்வந்த இந்தக் கே.பி. திருநாவுக்கரசு, கருணாகரன்,நிலாந்தன்,நடராஜ முரளிதரன் போன்றோர் இலங்கை அரசால் கண்டுகொள்ளாதவர்களாக விடப்படும் மர்மத்தைப் புரிவது கடினமானதா?

எனவே,இவர்களது தயவில் இலக்கியம்-ஜனநாயகம் வளர்ப்பதென்பது மீளவும் எமது மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் பலியாக்குவதாகவே எடுக்கப்படவேண்டும்!அதைப் பல முனைகளில் நிகழ்த்தும் விசும்பு நிலையுள் இவர்கள் இருக்கின்றனர்.

இவர்களது,இன்றைய குரல் மக்களது எதிர்ப்புணர்வை மீளத் தமது பக்கம் தொடர்ந்து தகவமைப்பதற்கே!இதன்வழி தொடரும் அந்நியச் சேவையை திறம்பட நடாத்தி முடிக்க முனையும் முரளிதரன் போன்ற பெரும் புலிப்பிரமுகர்களைப் பார்த்து " கேடு கெட்ட கயவர்களே" நமது மக்களைவிட்டு தள்ளிப்போங்கள் என்கிறேன்.

உங்களுக்கென்ன அருகதையுண்டு "ஜனநாயகம்-பன்முகத் தன்மைகள்" குறித்துப்பேசுவதற்கு?

உங்களது பாசிச அதிகாரம் சிதைந்து சின்னாபின்னமாகும் இந்தத் தருணத்தில் அரும்பும் மக்களது சுய மேலாண்மையைத் தொடர்ந்து அவர்களது குரலாக வெளிப்படுவதைத் தட்டிப்பறித்து உங்களுக்குள் உருவகப்படுத்தி, உங்களையும் மக்களது குடிசார் அமைப்புகளாக்கும் முயற்சியா இது?

நீங்கள் யார்?

மக்களையும்,அவர்களது குழந்தைகளையும் தொடர்ந்து "தமிழீழம்"சொல்லிக் கொலை செய்தவர்களல்லாவா?

இறுதிவரை மக்களைச் சுயமாகச் செயற்பட முடியாது தண்டித்த அராஜகவாதிகள் நீங்கள்!உங்களுக்கும் பன்முகத் தன்மைக்கும்,ஜனநாயகத்தும் என்ன தொடர்பு?

புலிப் பாசிஸ்டுக்காளாகிய உங்கள் அகராதியில், ஜனநாய வாடையே இல்லையே?

இரத்தம் படிந்த உங்கள் கரங்களையும்,பிழைப்பைக் குறித்தே இயங்கும் உங்கள் மூளைகளையும்,வஞ்சகத்தையே சுமக்கும் உங்கள் இதயங்களையும் காலம், ஒரு நாள் நிறுத்தியே தீரும்!

உங்களை,அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களும்,உயிராயுதமெனக் கண்டிப்பாகக் கொலைக்கு அனுபப்பட்ட அப்பாவி இளைஞர்களது துஷ்ப் பிரயோகஞ் செய்யப்பட்ட உயிரும் சும்மா விடாது!அந்த ஆன்மா உங்களது பரம்பரைகளையே தண்டிக்க முனையும்.

இஃது, சத்தியத்தின்பார்ப்பட்ட வரலாற்று நியதி, முரளிதரன் நடராஜா!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.04.2012


Donnerstag, März 15, 2012

சனல் 4: ஆவண விவரணமும்,மறைக்கப்படும்அரசியலும்-என்ன?

சனல் 4: ஆவண விவரணமும்,மறைக்கப்படும்அரசியலும்-என்ன?


லங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும்நாம் யார்?, தமிழர்கள்?, போதுமா இந்த அடையாளம்-" புலிகளுக்குப் பின்னால் கோசம் போடுவதுகூட எமது மக்களுக்கானதாகாதா?" - கேட்பீர்கள்!

அப்போ, நிறுவனங்களின்,இயக்கங்களின்,அரசுகளின் அடிமைகளா?

அல்லது, நம்மைப் புரிந்துகொண்டு நமது விடுதலைக்குகந்த கல்வியின்,கேள்வியின்மூலம் நம்மை வளர்த்தெடுத்து ,இத்தகைய நிறுவனங்களுக்கெதிராகப் போராடப் போகின்றோமா?

இவை கேள்விகள்.ஆனால், நாம் சிந்தித்துச் செயற்படும் காலமே நமது விழிகள்முன் நிழலாடுகிறது.

சனல்4 மிக நேர்த்தியாகப் போர் குற்றத்தைக் குறித்தான அனைத்து வழிகளிலும் சேகரிக்கப்பட்ட தரவுகளை நமக்குமுன் கொட்டியுள்ளது.அப்பாவி மக்களது துயருள் சம்பந்தப்பட்ட இரண்டு இராணுவ ஜந்திரங்களுக்கிடையிலான பலப்பரீட்சையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப் பாசிச இராணுவமானது சிங்கள இராணுவ ஜந்திரத்தால் நிர்மூலஞ்செய்யப்பட்டபோது,சிங்கள இராணுவமானது ஜனநாயகப் படுகொலையைச் செய்துள்ளது.சுமார் 60 ஆண்டுகால அரச நிர்வாகக் கட்டமைப்புடைய இலங்கைப் பாராளுமன்றச் சட்டவாதிக்கமானது இவற்றைத் திட்டமிட்டு நியாயப்படுத்தும் சந்தர்ப்பத்தில் சனல் 4 ஆவணப்படமாக இலங்கைப் படுகொலைக் களத்தையும் மீள,மீளக் கொணர்கிறது!


வழமைபோலவே,புலி அநுதாபிகளுக்கு இது ஏற்புடையதாக இருக்கவில்லை!தமது மதிப்புமிக்க சேனைத் தலைவரது மூளையைக் குடைந்து பரிசீலிக்கும் சிங்கள வன்கொடுமை இராணுவத்தின் திமிரை உள்வாங்குவதில் அவர்களுக்கு மனத்தளவில் பல தடைகள் இருக்க முடியும்.அதுவும்,அவமானமாகவும் இருப்பதற்கானவொரு புள்ளியில் பிரபாகரனது பிணத்தை அவர்கள் அம்மணமாக்கியும் வைத்திருக்கிறார்கள்.இது,சிங்கள வரலாற்று மனவியல்புக்கொப்ப நிகழ்ந்தவொரு பாசிசச் சேட்டையாகவே இருக்கிறது."கனக விஜயனின் முடித் தலை நெரித்துக் கல்லினை வைத்தான் சேர மகன்" என்றும்,"அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினேன்"என்றும் தமிழ்த் தரப்பு வீரம் பேசியது. இது மாற்றுச் சமுதாயத்தோடு இசைந்து வாழத் தகமையற்ற உச்சாடனங்களாகவே மேலும் விரிந்துகொண்டன. இத்தகைய உச்சாடனங்களுக்குப் பின்னால் நிகழ்ந்த ஊக்கமானது உயர்தட்டு வர்க்கத்தின் அதிகாரப் போட்டிக்கேற்க மக்களைத் தயார்ப்படுத்தும் மிகக் குறுகிய நலன்களைக் கொண்டியங்கிக் கொள்கிறது. இது,புலிகளது கடந்தகால ஆயுதப்போராட்டத்திலும் கணிசமாகவே இனங்காணத் தக்கதாகவிருந்தது!புலம் பெயர் மக்களிடத்திலும் இது தொடர்கதையாகவேண்டுமா?

புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது,அது சொந்த மக்களுக்குச் சவக்குழிவெட்டி ஓய்ந்தபோனவொரு அராஜகக் குழுவாக மங்கிக்கொண்டிருந்ததை வரலாற்றின் வெளிச்சத்தில் உரசிப்பார்த்தால் தெளிவு பெறலாம்.இந்தச் சனல் 4 வெளிப்படுத்தும் ஆவணப்படங்கள், காட்சிகள் அனைத்தும் ஏலவே நாம் பார்த்தவை.எனினும்,அதையிட்டுப் புலிவிசுவாசிகள் நம்பத் தயாரில்லாதிருந்தார்கள்.எனவே,தமது சரிவுகளை நியாயப்படுத்தும் முகமாகப் புலிகளது பேரவாவாகப் புலிகளின் தலைவனை உயிருடன் காத்துப் பதுக்கி வைத்திருப்பதாகவும்,அத்தகைய படங்கள் போலியானவையென்றும்கூறி இலங்கைப் பாசிச அரசின் படுகொலை அரசியலை வெளியுலகில் நியாயப்படுத்தும் காரியத்தில் அறிந்தே செயற்பட்டனர்.

இப்போதைய இந்த ஆவணப்படமானது இலங்கையில் இனவழிப்பு நிகழ்ந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்கிறது. அதுள்,சரணடைவுகொண்ட புலித் தலைமை யுத்த விழுமியங்கட்கு அப்பால் படுகொலை செய்யப்பட்டுக் கடலில் வீசி எறியப்பட்ட மிகப் பிற்போக்குச் செயலையும் கண்டிப்பதில் மக்களைக் கைகோற்கக் கோரிக்கொள்கிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்து மேற்கில் ஒரு ஒட்டுண்ணிச் சமூகமாக வாழும் இந்தச் சந்தற்பத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது புலி அரசியல்-போராட்ட நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இவர்கள் வழமைபோலவே பிழைப்புவாத அரசியலுக்கேற்பச் சனல்நான்கினது ஆவணப்படத்தைக் கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.அல்லது, அதை அங்ஙனம் தவிப்பதால்(அது குறித்துப் பொது வெளியில் உரையாடாது)தமது புலிகளது எச்சங்களுக்கு மீளவுமொரு முண்டுகொடுத்துப் புலம்பெயர் தேசத்தில் மக்களை முட்டாளுக்கும் அரசியல் சதிக்கு உடந்தையாகிக்கொள்கின்றனர்.

புலியினது அப்பட்டமான மக்கள் விரோதக்கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே, நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இவர்களுக்குப் புலிவழி புனையப்பட்ட அல்லது இட்டுக்கட்டபட்ட "தமிழ்சமுதாயம்-விடுதலை" என்பது தமது விருப்பத்தின் கருவாக இருப்பதை எப்பவும்போலவே"தமிழீழ விடுதலை"என்று, கனவுலகத்தைத் தயார்ப்படுத்தி உண்மைகளை ஏற்பதில் சிக்கலாகிறது!இது ஒருவகை உள நோய்!

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கஞ்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:அன்று,புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்தவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களே,புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது வயிற்றிலடித்து,புலித் தலைவனைக் காக்க வீதிக்கு இறங் கினார்கள். அப்போதும், மக்களைச்சாட்டி ஒரு விவேகமற்ற கபட அரசியல் வீதிக்கு வந்தது.அது,உண்மையற்ற புலிக் கூட்டத்தின் அரசியலென்பதை உலகம் உணர்ந்தபோது தோற்றுக் கொண்டது.

இப்போ,இந்தவுலகம் தனது நலங்கட்கு அமைய இந்த ஆவணப்படங்களது மூலமாக இலங்கை அரசின் பாசிசத்தை வெளிசமிட்டுக் காட்டுவதற்கு எங்கள் மக்கள்மீது இலங்கை அரசு-புலிப்பாசிசம் ஏவிய இராணுவ யுத்தம் காரணமாகிறது.இந்த யுத்தக் குற்றமானது இலங்கை அரசு மேற்குலகத்தைச் சார்ந்திருந்தபோது எப்பவும்போலவே மறைக்கப்பட்டிருந்தது.இப்போது,ஆசிய-மேற்குலகப் பொருளாதாரச் சந்தைப் பிளவுகளது நெருக்கடியுள் தோற்றமுறும் புதிய முரண்களுக்கமையத் தமது நலன்களது தெரிவாக நமது மக்களது அழிவுகள் அரசியலாகிறது.இதை வெளிப்படையாக இனங்கண்டு, அதன் உண்மைகளது திசைவழியில் நாம் பயன்படுத்தும் அரசியல் என்ன?

இது, குறித்து விரிவாக விளங்கிக்கொள்வது அவசியமில்லையா?

அல்லது,வழமைபோலவே இந்த மேற்குலகச் சார்பு அரசியல் வழித் தனிநபர் இலாபங்களுக்கமைய எமது மக்களது அழிவையும்,அந்த அழிவின்வழி பெறப்பட்ட அடிமை வாழ்வையும் பயன்படுத்திச் சொந்த இலாபங்களைக் கண்டடையப் போகின்றோமா?

சனல்4 ஆவணமாகத் தயாரித்த எமது மக்களது யுத்தவாழ்வு கற்பிக்கும் பாடமென்ன?புலிகளது வரலாற்றுக் கொடுமையிலிருந்து வெளிப்படும் குருதிக்குச் சரியான-நியாயமான அரசியல் அர்த்தம் உண்டா? இக் கேள்விகளைத் தட்டியுதைத்தெறிந்துவிட்டு,மீளத் தலைவருக்கு ஆலவட்டம் காட்டும் மனப்பாங்கானது தனித்தன்மை அபிவிருத்தியை(உண்மைகளைக் கண்டடையத்தக்க ஆய்வு மனம்) வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே, நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக் கட்டுமானம், பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவு கொள்கின்றபோது, அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு பாசிச அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுக்கீடுமின்றிச் செய்கிறது.

அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப்பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில் போய்முடிகிறது! சனல் 4 காட்டும் ஆவணமானது இத்தகையவொரு சூழலில் மேற்குலக அரசியலுக்கேற்ப,அவர்களது நலனுக்கானதெரிவுகளில் சில வினையாற்றல்களைக் கோரிக்கொண்டிருக்கிறதேயொழிய நமது மக்களது அழிவுக்கும்,அதுசார்ந்த நியாயமான அரசியல் தீர்வுகளுக்கும் இதைச் சாத்தியமாக்கும் வலு நமது புலம் பெயர்ந்த மக்களாற்றாம் முடியும். இதைப் பயன்படுத்தும் முறைமைகளில் புலிகளைக்கடந்தவொரு மகள்திரள் அமைப்பு உருவாகுமானால் அதுவே, பாசிசப் புலிப் புரளிகளைப் பின் தள்ளி நிலத்திலுள்ள மக்களுக்காக உண்மையாக அரசியல் செய்யும் ஒரு அறத்தை நமக்கு வரலாற்றில் தரும் சந்தர்ப்பத்தைக் காலம் கனிய வைக்கும்.

எனவே,புலம்பெயர் மக்கள் பிழைப்புவாதப் புலிகளைத் தவிர்த்து இயங்கும் தேவை அவசியமானது.

ஏனெனில்,புலம்பெயர் பினாமிப் புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலிச் சிந்தனைப்பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும்தமது இயக்க நலனுக்காகக் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் புலம்பெயர் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் (சுயமாக மக்களை இயங்க அனுமதிக்காமை) அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.எனவே,புலிகளது பரப்புரைகளைக்கடந்து பிரபாகரன் மரணத்தையும்,அவர் கொலை செய்யப்பட்டதையும்விட,மக்களது அழிவுகளைக் குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்ட இந்தச் சனல் 4 ஆவணத்தின்வழி ஒரு மக்கள் திரள் அரசியலூக்கம் கருக்கொண்டு,வெளியுலக மக்களரங்குக்கு வருமானால் அதுவே,தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கானவொரு அரசியல் உந்துதலையும், போராட்டவுணர்வையும் மீளத் தகவமைத்துக்கொள்ளும். இது,நிலத்திலுள்ள மக்களே தமது அடிமை விலங்கை ஒடிக்கும் எழிச்சிக்கு உந்துதலாகவெழவும் முடியும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
16.03.2012